பக்கம் எண் :


43

போது உண்டாகிய அழகின் தோற்றம், கடுமிசையான் கட்டியிற் கொண்டற்று-கசப்பு மருந்தினையுண்ணாதவனுக்குக் கருப்புக்கட்டியில் வைத்து ஊட்டினாற்போன்றது.

(க-து) கணவனும் மனைவியும் முத்தியுலகு செல்வதற்கு வழித்துணையாவார்; காதலிற் கருத்து மிகுதியுஞ் செலுத்தாது வாழ்ந்தால், அது புணைபோலக்கொண்டு போய்ச் சேர்க்கும் மணமுடிப்பது பேரின்ப வாழ்வு குறித்ததுவேயாம்.

(வி-ம்) காதலனும் காதலியுமாக வாழ்ந்து நரை திரை மூப்புப் பிணியால் நலிந்தபோது அவ்விருவர்க்கும் உலகப்பற்று நீங்கிப் பேரின்பத்தில் கருத்துச் செல்வது இயற்கை யாதலால் சிற்றின்பத்திற்கு வாழ்க்கைத் துணையாக அமர்ந்த இவர் பேரின்பத்திற்கும் துணையாவார் என்பது தோன்ற "துணை என்ப" என்றார். காதலிருவர் கருத்தொருமித்தாதரவுபட்டதேயின்பம் என்றபடி இருவரும் கள்ளமில் உள்ளத்தராய்க் கலந்தணையும் இன்பமே இன்பம் என்பது தோன்ற "தோமில் இணைவிழைச்சு" என்றார். காமப்புணர்ச்சியின் மிகுதியும் கருத்துச் சென்றால் உலகத்தில் இம்மைப்பயனும் மறுமைப் பயனும் எண்ணாது தீயவழியை நாடுவர் என்றும், அது பேரின்பத்திற்குச் செல்வதற்குத் துணையாகாது என்ற கருத்தினால் "மிக்காகாராகல்" என்றார். நீர் வழிச் செல்வார்க்குப் புணை துணையாகிக் கரைசேர்ப்பது போல பேரின்ப நெறி செல்வோர்க்குப் புணர்ச்சியின் மிகாமை துணையாகிக் கூட்டும் என்பார் "புணைதழீஇக்கூட்டும்" என்றார். கசப்பு மருந்தினைக் காட்டி யூட்டினால் மக்கள் உண்ணாது மறுப்பர். இனிப்புமேல் தடவியூட்டினால் அதனை மறுக்காமல் உண்பர். இது மக்களியற்கை ஆதலாற் கடவுள் சிற்றின்பம் முதலிற் காட்டி மக்களுக்குப் பின் பேரின்பத்திற் பற்றுண்டாகும்படி இல்வாழ்க்கை யமைத்திருக்கின்றார் என்பது விளக்க வேட்டபோழ்து ஆகுமணி........கட்டியிற்கொண்டற்று என்றார். இதனால் இல்லறமே சிறந்தது அதனின்றே பின் முத்தியுலகஞ் சேரலாம் என்று குறிப்பாக விளக்கியது.

(கு-பு) விருந்து துய்ப்பார் என்பது சந்தம் நோக்கி விருந்துய்ப்பார் எனக் குறைந்து நின்றது. உய்ப்பார் எனப் பிரித்து விருந்து தருவார்