(கு-பு) செம்மை+பாகம்-செம்பாகம். நன்மை+மனை-நன்மனை. பசுமை+புல் - பைம்புல்: இவை பண்புத்தொகை. புன்னிலை ; ஆகுபெயராய் நிலத்தை யுணர்த்தியது. அடார்: வினையாலணையும் பெயர். ஈர்த்தார் என்பதும் அது. 36. | உள்ளவா சேற லியைபெனினும் போம்வாய வெள்ளத் தனசேறல் வேண்டன்-மனைக்கிழவன் நள்ளளவின் மிக்காய காற்றொழிலை யோம்பலே தெள்ளறிஞர் கண்ட நெறி. |
(சொ-ள்) உள்ளஆ சேறல் இயைபு எனினும்-தன்னிடத்தில் உள்ள பொருளுக்கு ஏற்றவாறு செலவழித்து நடப்பது பொருத்தமென்றாலும், போம்வாய வெள்ளத்து அன சேறல் வேண்டல்-செலவழிக்க வேண்டிய இடத்தில் வெள்ளத்தைப் போலப் பெருக்கமாகச் செலவு செய்து நடப்பதை விரும்பற்க; மனைக்கிழவன்-ஒரு மனைக்குரிமையுடைய தலைவன், நள் அளவின் மிக்காய கால் தொழிலை ஓம்பலே - விரும்பும் அளவிற்கு மேற்பட்ட அளவுடைய முயற்சியை விலக்குவதே, தெள் அறிஞர் கண்டநெறி-தெளிந்த அறிவுடையோர் கூறிய வழியாம். (க-து) இல்வாழ்வோர் செல்வத்திற்குத் தக்கவாறு செலவழிக்க வேண்டுமெனினும் அளவுகடந்து செலவழித்தல் ஆகாது; தம்பொருள் அளவிற்கு மேற்பட்ட முயற்சியையும் செய்யக் கருதலாகாது. (வி-ம்) உள்ளவா சேறல் என்பது பொருள் உள்ள வாற்றை யுணர்ந்து அதற்குத்தகச் செல்லுதல் எனப் பொருள் படும். சேறல்-செல்லுதல். இது நடப்பதையுணர்த்திற்று. செல்வத்துக்குத் தக்கவாறுதான் செலவழிக்கின்றான்; அதிகமாகச் செலவு செய்திலன்; இவ்வாறு செலவுசெய்வது இவற்கு இயைத்தே என்று பிறர் கூறத்தக்கதாயினும் அதுவுஞ் செய்ய விரும்பற்க
|