அறத்துப் பால் இல்லறவியல் அதிகாரம் 12. நடுவு நிலைமைஅஃதாவது, தகுதி பற்றி ஒருவரை ஒருவினைக்கு அமர்த்தும் போதும், திறமை பற்றி ஒரு துறையிற் சிறந்தவர்க்குப் பரிசளிக்கும் போதும், விலைக்குக் கொள்ளும் பொருட்டுப் பண்டங்களுள் நல்லனவற்றைத் தெரிந் தெடுக்கும்போதும், குற்றச்சாட்டுப் பற்றி ஒருவர் நடத்தையை ஆய்ந்து தீர்ப்புக் கூறும் போதும் பகை நட்பு நொதுமல் (அயல்) என்னும் முத்திறத்தும் ஒத்திருந்து உண்மைப்படி ஒழுகுதல் நன்றி செய்தவரிடத்துங் கண்ணோடி நடுநிலை திறம்பக் கூடாதென்பதற்கு இது செய்ந்நன்றியறிதலின் பின் வைக் கப்பட்டது. நடுநிலை என்னும் சொல், சமன் செய்து சீர்தூக்குந் துலைக் கோலில் நடுநின்று ஒருபாற் கோடாத நாவின் நிலைமையினின்று எழுந்தது. |