என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - என் காதலர் எப்போதும் என் உள்ளத்துள் மகிழ்ந்து வதிகின்றார் ; ஏதிலர் இகந்து உறைவர் என்னும் இவ்வூர் - இதனை யறியாது . அவர் அன்பிலரென்றும் , பிரிந்து வேறிடத்து வதிகின்றாரென்றும் , பழித்துரைக்கும் இவ்வூர் .