பக்கம் எண் :

காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன்.

 

(காமக்கடலை நிறைபுணையாக நீந்தல் கூடுமென்ற தோழிக்குச் சொல்லியது.)

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் - காமம் என்னுங் கடலை நிறைபுணையாக நான் நீந்தாம லில்லை, நீந்தத்தான் செய்தேன், நீந்தியுங் கரைகாணவில்லை ; யாமத்தும் யானே உளேன் - அதனால் மற்றெல்லாருந் தூங்கும் நள்ளிரவிலும் நடுக்கடலில் நானே தன்னந் தனியாகவிருந்து அலைசடிப்படுகின்றேன்.

நிறைப்புனை காமப் பெருங்கடலைக் கடத்தற்குப் போதிய வலிமையுள்ளதாயில்லை யென்பது நீ துணையாயில்லை யென்னுங் குறிப்பினது. கடுமை இங்கு மிகுதி குறித்து நின்றது. எச்சவும்மை முன்னுங் கூறப்பட்டது. புணை குறிக்கப்படாமையால் இஃது ஒரு மருங்குருவகம்.