பக்கம் எண் :

உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்

 

(இதுவுமது)

விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்-அன்று விரும்பி உண்ணெகிழ்ந்து மேன்மேலுங் காதலித்து அவரைக் கண்ட கண்கள்;  உழந்து உழந்து உள்நீர் அறுக-இன்று தூக்கமின்றி யழுந்துன்பத்தால் வருந்தி வருந்தி தம்மகத்துள்ள நீரெல்லாம் வற்றிப்போக!

அடுக்கு இடைவிடாமை பற்றி வந்தது. சினைவினை முதல்மேல் நின்றதுபோல,அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.