(முன்பு பிரிவுடம்பட்ட தலைமகள் அஃதாற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை விரும்பியவர்க்கு அன்று பிரிவையுடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ- அதனை ஆற்றாது இன்று பசந்த என் இயல்பை யார்க்கு எடுத்துச் செல்வேன்! உடம்பாடு பெற்றே பிரிந்தமையின் 'நயந்தவர்' என்றும், பிரிவுக் காலத்திற்கூடுதலில்லையாதலின் 'நல்காமை' யென்றும், முன்னருடம் பட்டமையும்பின்னர் ஆற்றாது பசந்தமையும் தன் செயலே யென்பாள் 'பசந்த வென்பண்பு என்றும், தன் குற்றத்தை எவரிடமுங் கூறி முறையிட முடியாதாகலின்'யார்க்குரைக்கோ' என்றும். கூறினாள். 'உரைக்கு' செய்கு என்னும் வாய்பாட்டுத் தன்மை யொருமை யெதிர்கால வினைமுற்று. 'ஓ,' 'பிற' அசைநிலைகள்.
|