[ தன் ஆற்றாமை தீருந் திறம் நாடியது . ] நெஞ்சே - என் உள்ளமே ; எவ்வ நோய் தீர்க்கும் மருந்து ஒன்று- இத்துன்ப நோயைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை ; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ - எத்தன்மைய தாயினும் ஒரு முறையை எண்ணி எனக்குச் சொல்ல மாட்டாயா ? பொதுவான மருந்தினால் தீரும் உடல்நோயன்றென்பாள் ' எவ்வநோய் ' என்றும் , கற்புத்தவிர எதையும் இழக்கும் மருத்துவ முறையாயினும் என்பாள் ' எனைத்தொன்றும் ' என்றும் ' கூறினாள் .
|