பக்கம் எண் :

ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

 

(தலைமகன் சென்றபின் வந்த தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்த கூறியது.)

ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு உரையாடா திருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து - அது எதற்கெனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு.

இயல்பாக நிகழ்ந்த தும்மலை வேண்டுமென்று செய்ததாகக் கொண்டதால் (புலவி) நுணுக்கமாயிற்று. தும்மியபோது வாழ்த்துதல் மரபாகலால், உரையாடல் வேண்டியதாயிற்று என்பதாம். ' யாம் ' என்றது அரசப் பன்மை (Royal 'we' ) , அகரந் தொக்கது.