பக்கம் எண் :

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.

 

சான்றோர்க்கு - அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன்மனை நோக்காத பேராண்மை அறன் ஒன்றோ - பிறன் மனைவியைக் கருதாத பெரிய ஆண்டகைமை அறம் மட்டுமோ ; ஆன்ற ஒழுக்கு - நிரம்பிய ஒழுக்கமுமாம்.

புறப் பகைகளை வெல்வதினும் அகப் பகைகளை வெல்வதே அருமையாதலின் , அறுவகை உட்பகைகளுள் ஒன்றாகிய காமத்தை அடக்குவதைப் பேராண்மை என்றார். ஒன்றோ என்பது ஒன்று தானோ என்று பொருள்படுவதாம். பிறன்மனை நோக்காமை பிறர்க்குச் சிறந்த அறமாயினும் சான்றோக்கு இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து. எச்சவும்மை தொக்கது.