அறத்துப் பால் துறவறவியல் அதிகாரம் 33. கொல்லாமைஅஃதாவது இல்லறத்தில் அரசன் கொலைத்தண்டனையும் போர்த்தொழிலுந்தவிர மற்ற வகைகளில் ஈரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை எவ்வுயிரையுங் கொல்லாமையும், துறவறத்தில், சிறப்பாக இறுதிநிலையில், ஓரறிவுயிரையுங் கொல்லாமையும் ஆம். இன்னாதவற்றுள் மிகக்கொடியது கொலையாதலாலும் ஓரறிவுயிர்க்கொலை துறவறத்தின் இறுதி நிலையிலேயே ஒழிக்கக் கூடிய தாதலாலும், இது இன்னா செய்யாமையின் பின் வைக்கப்பட்டது. மரக்கறியுணவும் ஓரறிவுயிர்க்கொலையால் வருவதாலும், முளைக்கவுந் துளிர்க்கவும் கூடிய ஒவ்வொரு விதையும் நிலைத்திணையுறுப்பும் முட்டை போன்றிருத்தலாலும், பிறர் சமைத்த மரக்கறி யுணவுண்பதும், பிறர் கொன்ற வுரியின் ஊனைத்தின்பது போலா மாதலாலும், துறவியர் விரும்புவது வீட்டுலக வாழ்க்கையேயன்றி இவ்வுலக வாழ்க்கையன்றதலாலும், முற்றத் துறந்த முழு முனிவர். "கனியேனும் வறிய செங்கா யேனு முதிர்சருகு கந்தமூலங்களேனும் கனல்வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்து" ப் பின்பு இலை சருகுகளையேயுண்டு, இறுதியில் அதுவுமின்றி ஓகத்திலமர்ந்து உடம்பு துறப்பர் என அறிக. |