பக்கம் எண் :

உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில்

 

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே- யாரொடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, இனி இவரை என்று காண்பேமென்று அவர் ஏங்குமாறு நீங்குதலாகிய அத்தன்மையதே; புலவர் தொழில் - சிறந்த கல்வியுடையார் செயலாம்.

கற்றாரின் அடக்கமும் அறவொழுக்கமும் இன்சொல்லும் உறுதி பயக்கும் அறிவுரையும் எல்லாரையும் இன்புறுத்துதலால், அவரை விட்டுப் பிரிய ஒருவரும் விரும்பார் என்பதாம். ஏகாரம் தேற்றம்.