பக்கம் எண் :

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.

 

நல் இனத்தின் ஊங்கும் துணையும் இல்லை - ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் சிறந்த துணையுமில்லை; தீ இனத்தின் (ஊங்கு ) அல்லல் படுப்பதும் இல் -தீயினத்தினும் மிகுதியாகத் துன்புறுத்துவதும் இல்லை.

நல்வழியிற் செலுத்தி இன்புறச் செய்வதால் நல்லினத்தைத் துணையென்றும், தீய வழியிற்போக்கித் துன்புறச் செய்வதால் தீயினத்தைப் பகை யென்றும், கூறினார். அல்லற்படுத்துவது பகையே. ஐந்துனுருபுகள் தமக்குரிய உறழ்பொருளின் கண் வந்தன. உம்மை பிரித்துக் கூட்டப் பட்டது. 'படுப்பதூஉம்' இன்னிசையள பெடை.