பக்கம் எண் :

அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்

 

கருவியான் காலம் அறிந்து செயின் - சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; அருவினை என்ப உளவோ - அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ ? இல்லை .

கருவிகள் ஐவகையாற்றலும் நால்வகை ஆம்புடைகளுமாம் . அவற்றொடு காலமும் வேண்டுமென்பதற்குக் 'கருவியான்' என்றார் . 'உளவோ' என்னும் வினா எதிர்மறை விடையை அவாவுவது .