பக்கம் எண் :

இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்:

 

இறை கடியன் என்று உரைக்கும் ; இன்னாச்சொல் வேந்தன்-நம் அரசன் கொடியவன் என்று குடிகளாற் சொல்லப்படும் துன்பந்தருந் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-வாழ்நாள் குறைந்து தன் செல்வத்தையும் விரைந்திழப்பான்.

இன்னாச்சொல் உளம் நொந்து உரைக்கும் சொல். 'உறை' முதனிலைத் தொழிலாகு பெயர். உறைதல்-தங்குதல் அல்லது குடியிருத்தல்.