பக்கம் எண் :

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

 

அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவனது மனத்தின்கண் உள்ளதனை ஒருதலையாக உணரவல்லவனை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்- வடிவால் மாந்தனாயினும் மதிநுட்பத்தால் தெய்வம்போன்றவனென்று கருதி,அதற்கேற்ப மதித்துப் போற்றுக.

உணர்தல் உள்ளத்தால் நுணுகியறிதல். மாந்தன் மாந்தனே யாதலின் 'தெய்வமாக' என்னாது 'தெய்வத்தோ டொப்ப' என்றார். 'படாஅ' இசைநிறை யளபெடை.