கற்ற கற்றார்முன் செலச் சொல்லுவார்-தாம் கற்றவற்றைக் கற்றாரவைக்கண் அவர் உளங் கொள்ளும்வகை சொல்லவல்லவர்; கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்ற ரெல்லாருள்ளும் நன்கு கற்றவரென்று கற்றாரால் உயர்த்துச் சொல்லப்படுவர்; "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்-நலமிக்க பூம்புன லூர ! பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால்." கற்றார் என்னும் சொல் பன்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலை யணியாம்.
|