பருகுவார் போலினும் - காதல் மிகுதியால் விழுங்கி விடுவார்போல் தோன்றினும், பண்பு இலார் கேண்மை - நற்குணமில்லார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலினுத் தேய்ந்து போதல் நல்லது. குன்றல் - வரவரச் சுருங்கி இறுதியிற் சிறிதும் இல்லாமற் போதல், தீயார் நட்பு வளர்தலும் தேய்தலும் போன்றதே யென்பது கருத்து. உம்மை உயர்வு சிறப்பு. பருகுவார் போலுதல் என்னும் திருக்குறள் வழக்காறு, பிற்காலத்துப் புலவரால் வழிவழி ஆளப்பட்டு வந்துள்ளது. "பருகுவன்ன காத லுள்ளமொடு" (அகம். 369) "பருகு வன்ன வேட்கை" (புறம். 207) , "பருகு வன்ன வருகா நோக்கமொடு" (பொருத. 77), பருகு வன்ன நோக்கமொடு (பெருங். 3.7: 80), பருகிய நோக்கெனும் (கம்ப. 1. 11: 37), பருகுவான் போல நோக்கும் (பாக. 4.3 : 35), "பருகுவான் போல நோக்கி" (கூர்ம. திருக்கல். 91).
|