பக்கம் எண் :

பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல்.

 

பகை நட்பு ஆம் காலம் வருங்கால்- தம் பகைவர் தமக்கு நண்பரா யொழுகுங் காலம் வரின்; முகம் நட்டு அகம் நட்பு ஒரீஇ விடல் - தாமும் அவர்போல் முகத்தால் நட்புச் செய்து அகத்தில் அதைவிட்டு நீங்கிப் பின்பு வேண்டாதபோது புறநட்பையும் விட்டு விடுக.

பகை நட்பாங் காலமாவது பகைவரை வெளிப்படையாக நீக்கமுடியாத காலம். இதனால், வேண்டும்போது பகைவரோடும் புறத்தளவில் தொடர்பு கொள்க என்பது கூறப்பட்டது. 'ஒரீஇ' இன்னிசையளபெடை.