பேதைமை என்பது ஒன்று யாது எனின் - பேதைமை என்று சொல்லப்படும் ஒரு குற்றம் என்னது என்று வினவின்; ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல் - தனக்கு கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கந் தருவனவற்றை விட்டு விடல். கேடுதருவன வறுமை, நோய் , அறங்கடை (பாவம்) பழி, அறியாமை , பகை முதலியன. ஆக்கந் தருவன செல்வம் , உடல் நலம் , அறம் , புகழ் , அறிவு , நட்பு முதலியன. ஆகவே , பேதைமை யென்பது தானே இருமையின்பமும் புறக்கணித்தல் என்பதாம்.
|