926. | துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் |
| நஞ்சுண்பார் கள்ளுண் பவர். |
|
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம். |
927. | உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் |
| கள்ளொற்றிக் கண்சாய் பவர். |
|
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள். |
928. | களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் |
| தொளித்ததூஉம் ஆங்கே மிகும். |
|
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான். |
929. | களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் |
| குளித்தானைத் தீத்துரீஇ அற்று. |
|
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான். |
930. | கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் |
| உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. |
|
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா? |