946. | இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் |
| கழிபேர் இரையான்கண் நோய். |
|
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை. |
947. | தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் |
| நோயள வின்றிப் படும். |
|
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும். |
948. | நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் |
| வாய்நாடி வாய்ப்பச் செயல். |
|
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்). |
949. | உற்றான் அளவும் பிணியளவும் காலமும் |
| கற்றான் கருதிச் செயல். |
|
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும். |
950. | உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் |
| றப்பானாற் கூற்றே மருந்து. |
|
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது. |