346. | யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் |
| குயர்ந்த உலகம் புகும். |
|
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான். |
347. | பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் |
| பற்றி விடாஅ தவர்க்கு. |
|
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. |
348. | தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி |
| வலைப்பட்டார் மற்றை யவர். |
|
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள்: அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள். |
349. | பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று |
| நிலையாமை காணப் படும். |
|
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும். |
350. | பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் |
| பற்றுக பற்று விடற்கு. |
|
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும். |