கடவுள் வாழ்த்து
 
1. அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி-
பகவன் முதற்றே, உலகு.

1

பதிவிறக்கம் செய்ய
உரை
 
2. கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்?.

2

பதிவிறக்கம் செய்ய
உரை
 
3. மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.

3

பதிவிறக்கம் செய்ய
உரை
 
4. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

4

பதிவிறக்கம் செய்ய
உரை
 
5. இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு.

5

பதிவிறக்கம் செய்ய
உரை
 
6. பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.

6

பதிவிறக்கம் செய்ய
உரை
 
7. தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது.

7

பதிவிறக்கம் செய்ய
உரை
 
8. அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
பிற ஆழி நீந்தல் அரிது.

8

பதிவிறக்கம் செய்ய
உரை
 
9. கோள் இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

9

பதிவிறக்கம் செய்ய
உரை
 
10. பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்,
இறைவன் அடி சேராதார்.

10

பதிவிறக்கம் செய்ய
உரை