தொடக்கம் | ||
கடவுள் வாழ்த்து
|
||
1. | அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- பகவன் முதற்றே, உலகு. |
1 பதிவிறக்கம் செய்யஉரை |
2. | கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்?. |
2 பதிவிறக்கம் செய்யஉரை |
3. | மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். |
3 பதிவிறக்கம் செய்யஉரை |
4. | வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. |
4 பதிவிறக்கம் செய்யஉரை |
5. | இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு. |
5 பதிவிறக்கம் செய்யஉரை |
6. | பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார். |
6 பதிவிறக்கம் செய்யஉரை |
7. | தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால், மனக் கவலை மாற்றல் அரிது. |
7 பதிவிறக்கம் செய்யஉரை |
8. | அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால், பிற ஆழி நீந்தல் அரிது. |
8 பதிவிறக்கம் செய்யஉரை |
9. | கோள் இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. |
9 பதிவிறக்கம் செய்யஉரை |
10. | பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார், இறைவன் அடி சேராதார். |
10 பதிவிறக்கம் செய்யஉரை |