தொடக்கம் | ||
நீத்தார் பெருமை
|
||
21. | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும்- பனுவல் துணிவு. |
21 பதிவிறக்கம் செய்யஉரை |
22. | துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டற்று. |
22 பதிவிறக்கம் செய்யஉரை |
23. | இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று, உலகு. |
23 பதிவிறக்கம் செய்யஉரை |
24. | உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து. |
24 பதிவிறக்கம் செய்யஉரை |
25. | ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும், கரி. |
25 பதிவிறக்கம் செய்யஉரை |
26. | செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கு அரிய செய்கலாதார். |
26 பதிவிறக்கம் செய்யஉரை |
27. | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான்கட்டே-உலகு. |
27 பதிவிறக்கம் செய்யஉரை |
28. | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும். |
28 பதிவிறக்கம் செய்யஉரை |
29. | குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணம் ஏயும், காத்தல் அரிது. |
29 பதிவிறக்கம் செய்யஉரை |
30. | அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும் செந் தண்மை பூண்டு ஒழுகலான். |
30 பதிவிறக்கம் செய்யஉரை |