தொடக்கம் | ||
அறன் வலியுறுத்தல்
|
||
31. | சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ, உயிர்க்கு. |
31 பதிவிறக்கம் செய்யஉரை |
32. | அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு. |
32 பதிவிறக்கம் செய்யஉரை |
33. | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல். |
33 பதிவிறக்கம் செய்யஉரை |
34. | மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்; ஆகுல நீர, பிற. |
34 பதிவிறக்கம் செய்யஉரை |
35. | அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும் இழுக்கா இயன்றது-அறம். |
35 பதிவிறக்கம் செய்யஉரை |
36. | 'அன்று அறிவாம்' என்னாது, அறம் செய்க; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை. |
36 பதிவிறக்கம் செய்யஉரை |
37. | 'அறத்து ஆறு இது' என வேண்டா; சிவிகை பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை. |
37 பதிவிறக்கம் செய்யஉரை |
38. | வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல். |
38 பதிவிறக்கம் செய்யஉரை |
39. | அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம் புறத்த; புகழும் இல. |
39 பதிவிறக்கம் செய்யஉரை |
40. | செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி. |
40 பதிவிறக்கம் செய்யஉரை |