தொடக்கம் | ||
இல்வாழ்க்கை
|
||
41. | இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. |
41 பதிவிறக்கம் செய்யஉரை |
42. | துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை. |
42 பதிவிறக்கம் செய்யஉரை |
43. | தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை. |
43 பதிவிறக்கம் செய்யஉரை |
44. | பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல். |
44 பதிவிறக்கம் செய்யஉரை |
45. | அன்பும் அறனும் உடைத்துஆயின், இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. |
45 பதிவிறக்கம் செய்யஉரை |
46. | அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில் போஒய்ப் பெறுவது எவன்?. |
46 பதிவிறக்கம் செய்யஉரை |
47. | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. |
47 பதிவிறக்கம் செய்யஉரை |
48. | ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. |
48 பதிவிறக்கம் செய்யஉரை |
49. | அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று. |
49 பதிவிறக்கம் செய்யஉரை |
50. | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். |
50 பதிவிறக்கம் செய்யஉரை |