வாழ்க்கைத்துணை நலம்
 
51. மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை.

51

பதிவிறக்கம் செய்ய
உரை
 
52. மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின், வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும், இல்.

52

பதிவிறக்கம் செய்ய
உரை
 
53. இல்லது என், இல்லவள் மாண்புஆனால்? உள்ளது என்,
இல்லவள் மாணாக்கடை?.

53

பதிவிறக்கம் செய்ய
உரை
 
54. பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும்
திண்மை உண்டாகப்பெறின்?.

54

பதிவிறக்கம் செய்ய
உரை
 
55. தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
‘பெய்’ என, பெய்யும் மழை.

55

பதிவிறக்கம் செய்ய
உரை
 
56. தற்காத்து, தற் கொண்டாற் பேணி, தகை சான்ற
சொற்காத்து, சோர்வு இலாள்-பெண்.

56

பதிவிறக்கம் செய்ய
உரை
 
57. சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.

57

பதிவிறக்கம் செய்ய
உரை
 
58. பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

58

பதிவிறக்கம் செய்ய
உரை
 
59. புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை-இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

59

பதிவிறக்கம் செய்ய
உரை
 
60. 'மங்கலம்' என்ப, மனைமாட்சி; மற்று அதன்
நன்கலம் நன் மக்கட் பேறு.

60

பதிவிறக்கம் செய்ய
உரை