தொடக்கம் | ||
புதல்வரைப் பெறுதல்
|
||
61. | பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற. |
61 பதிவிறக்கம் செய்யஉரை |
62. | எழுபிறப்பும் தீயவை தீண்டா-பழி பிறங்காப் பண்புடை மக்கட் பெறின். |
62 பதிவிறக்கம் செய்யஉரை |
63. | தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள் தம்தம் வினையால் வரும். |
63 பதிவிறக்கம் செய்யஉரை |
64. | அமிழ்தினும் ஆற்ற இனிதே-தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ். |
64 பதிவிறக்கம் செய்யஉரை |
65. | மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்; மற்று அவர் சொல் கேட்டல் இன்பம், செவிக்கு. |
65 பதிவிறக்கம் செய்யஉரை |
66. | 'குழல் இனிது; யாழ் இனிது' என்ப-தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர். |
66 பதிவிறக்கம் செய்யஉரை |
67. | தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். |
67 பதிவிறக்கம் செய்யஉரை |
68. | தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் இனிது. |
68 பதிவிறக்கம் செய்யஉரை |
69. | ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய். |
69 பதிவிறக்கம் செய்யஉரை |
70. | மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை என் நோற்றான்கொல்!’ எனும் சொல். |
70 பதிவிறக்கம் செய்யஉரை |