புதல்வரைப் பெறுதல்
 
61. பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

61

பதிவிறக்கம் செய்ய
உரை
 
62. எழுபிறப்பும் தீயவை தீண்டா-பழி பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

62

பதிவிறக்கம் செய்ய
உரை
 
63. தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையால் வரும்.

63

பதிவிறக்கம் செய்ய
உரை
 
64. அமிழ்தினும் ஆற்ற இனிதே-தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்.

64

பதிவிறக்கம் செய்ய
உரை
 
65. மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்; மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம், செவிக்கு.

65

பதிவிறக்கம் செய்ய
உரை
 
66. 'குழல் இனிது; யாழ் இனிது' என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

66

பதிவிறக்கம் செய்ய
உரை
 
67. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

67

பதிவிறக்கம் செய்ய
உரை
 
68. தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.

68

பதிவிறக்கம் செய்ய
உரை
 
69. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.

69

பதிவிறக்கம் செய்ய
உரை
 
70. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை
என் நோற்றான்கொல்!’ எனும் சொல்.

70

பதிவிறக்கம் செய்ய
உரை