தொடக்கம் | ||
அன்பு உடைமை
|
||
71. | அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்?ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். |
71 பதிவிறக்கம் செய்யஉரை |
72. | அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார் என்பும் உரியர், பிறர்க்கு. |
72 பதிவிறக்கம் செய்யஉரை |
73. | 'அன்போடு இயைந்த வழக்கு' என்ப-'ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு'. |
73 பதிவிறக்கம் செய்யஉரை |
74. | அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும், ‘நண்பு’ என்னும் நாடாச் சிறப்பு. |
74 பதிவிறக்கம் செய்யஉரை |
75. | 'அன்புற்று அமர்ந்த வழக்கு' என்ப-'வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு'. |
75 பதிவிறக்கம் செய்யஉரை |
76. | 'அறத்திற்கே அன்பு சார்பு' என்ப, அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. |
76 பதிவிறக்கம் செய்யஉரை |
77. | என்பு இலதனை வெயில் போலக் காயுமே- அன்பு இலதனை அறம். |
77 பதிவிறக்கம் செய்யஉரை |
78. | அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல்மரம் தளிர்த்தற்று. |
78 பதிவிறக்கம் செய்யஉரை |
79. | புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு?. |
79 பதிவிறக்கம் செய்யஉரை |
80. | அன்பின் வழியது உயிர்நிலை; அஃது இலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு. |
80 பதிவிறக்கம் செய்யஉரை |