தொடக்கம் | ||
சூது
|
||
931. | வேண்டற்க, வென்றிடினும் சூதினை! வென்றதூஉம், தூண்டில்-பொன் மீன் விழுங்கியற்று. |
931 பதிவிறக்கம் செய்யஉரை |
932. | ஒன்று எய்தி, நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்- நன்று எய்தி வாழ்வதோர் ஆறு?. |
932 பதிவிறக்கம் செய்யஉரை |
933. | உருள் ஆயம் ஓவாது கூறின், பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும். |
933 பதிவிறக்கம் செய்யஉரை |
934. | சிறுமை பல செய்து, சீர் அழிக்கும் சூதின், வறுமை தருவது ஒன்று இல். |
934 பதிவிறக்கம் செய்யஉரை |
935. | கவறும், கழகமும், கையும், தருக்கி இவறியார்-இல்லாகியார். |
935 பதிவிறக்கம் செய்யஉரை |
936. | அகடு ஆரார்; அல்லல் உழப்பர்;-சூது என்னும் முகடியான் மூடப்பட்டார். |
936 பதிவிறக்கம் செய்யஉரை |
937. | பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்- கழகத்துக் காலை புகின். |
937 பதிவிறக்கம் செய்யஉரை |
938. | பொருள் கெடுத்து, பொய் மேற்கொளீஇ, அருள் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும்- சூது. |
938 பதிவிறக்கம் செய்யஉரை |
939. | உடை, செல்வம், ஊண், ஒளி, கல்வி என்று ஐந்தும் அடையாவாம்-ஆயம் கொளின். |
939 பதிவிறக்கம் செய்யஉரை |
940. | இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல், துன்பம் உழத்தொறூஉம் காதற்று, உயிர். |
940 பதிவிறக்கம் செய்யஉரை |