தொடக்கம் | ||
விருந்து ஓம்பல்
|
||
81. | இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு. |
81 பதிவிறக்கம் செய்யஉரை |
82. | விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று. |
82 பதிவிறக்கம் செய்யஉரை |
83. | வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. |
83 பதிவிறக்கம் செய்யஉரை |
84. | அகன் அமர்ந்து செய்யாள் உறையும்-முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல். |
84 பதிவிறக்கம் செய்யஉரை |
85. | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ-விருந்து ஓம்பி, மிச்சில் மிசைவான் புலம்?. |
85 பதிவிறக்கம் செய்யஉரை |
86. | செல் விருந்து ஓம்பி, வரு விருந்து பார்த்திருப்பான் நல் விருந்து, வானத்தவர்க்கு. |
86 பதிவிறக்கம் செய்யஉரை |
87. | இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின் துணைத் துணை-வேள்விப் பயன். |
87 பதிவிறக்கம் செய்யஉரை |
88. | 'பரிந்து ஓம்பி, பற்று அற்றேம்' என்பர்-விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார். |
88 பதிவிறக்கம் செய்யஉரை |
89. | உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா மடமை; மடவார்கண் உண்டு. |
89 பதிவிறக்கம் செய்யஉரை |
90. | மோப்பக் குழையும் அனிச்சம்;- முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து. |
90 பதிவிறக்கம் செய்யஉரை |