தொடக்கம் | ||
இனியவை கூறல்
|
||
91. | இன் சொல்-ஆல் ஈரம் அளைஇ, படிறு இலஆம் செம்பொருள் கண்டார் வாய்ச் சொல். |
91 பதிவிறக்கம் செய்யஉரை |
92. | அகன் அமர்ந்து ஈதலின் நன்றேமுகன் அமர்ந்து இன்சொலன் ஆகப்பெறின். |
92 பதிவிறக்கம் செய்யஉரை |
93. | முகத்தான் அமர்ந்து, இனிது நோக்கி, அகத்தான் ஆம் இன் சொலினதே அறம். |
93 பதிவிறக்கம் செய்யஉரை |
94. | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொலவர்க்கு. |
94 பதிவிறக்கம் செய்யஉரை |
95. | பணிவு உடையன், இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி; அல்ல, மற்றுப் பிற. |
95 பதிவிறக்கம் செய்யஉரை |
96. | அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி, இனிய சொலின். |
96 பதிவிறக்கம் செய்யஉரை |
97. | நயன் ஈன்று நன்றி பயக்கும்பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். |
97 பதிவிறக்கம் செய்யஉரை |
98. | சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும் இம்மையும், இன்பம் தரும். |
98 பதிவிறக்கம் செய்யஉரை |
99. | இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ- வன் சொல் வழங்குவது?. |
99 பதிவிறக்கம் செய்யஉரை |
100. | இனிய உளவாக இன்னாத கூறல்- கனி இருப்ப, காய் கவர்ந்தற்று. |
100 பதிவிறக்கம் செய்யஉரை |