தொடக்கம் | ||
செய்ந்நன்றி அறிதல்
|
||
101. | செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. |
101 பதிவிறக்கம் செய்யஉரை |
102. | காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. |
102 பதிவிறக்கம் செய்யஉரை |
103. | பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின், நன்மை கடலின் பெரிது. |
103 பதிவிறக்கம் செய்யஉரை |
104. | தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாக் கொள்வர்-பயன் தெரிவார். |
104 பதிவிறக்கம் செய்யஉரை |
105. | உதவி வரைத்து அன்று, உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
105 பதிவிறக்கம் செய்யஉரை |
106. | மறவற்க, மாசு அற்றார் கேண்மை! துறவற்க, துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு!. |
106 பதிவிறக்கம் செய்யஉரை |
107. | எழுமை எழு பிறப்பும் உள்ளுவர்-தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. |
107 பதிவிறக்கம் செய்யஉரை |
108. | நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று. |
108 பதிவிறக்கம் செய்யஉரை |
109. | கொன்றன்ன இன்னா செயினும், அவர் செய்த ஒன்றும் நன்று உள்ள,கெடும். |
109 பதிவிறக்கம் செய்யஉரை |
110. | எந் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; உய்வு இல்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
110 பதிவிறக்கம் செய்யஉரை |