தொடக்கம் | ||
நடுவு நிலைமை
|
||
111. | தகுதி என ஒன்றும் நன்றே-பகுதியான் பாற்பட்டு ஒழுகப்பெறின். |
111 பதிவிறக்கம் செய்யஉரை |
112. | செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி, எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. |
112 பதிவிறக்கம் செய்யஉரை |
113. | நன்றே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல்!. |
113 பதிவிறக்கம் செய்யஉரை |
114. | தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும். |
114 பதிவிறக்கம் செய்யஉரை |
115. | கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. |
115 பதிவிறக்கம் செய்யஉரை |
116. | 'கெடுவல் யான்' என்பது அறிக-தன் நெஞ்சம் நடுவு ஓரீஇ, அல்ல செயின். |
116 பதிவிறக்கம் செய்யஉரை |
117. | கெடுவாக வையாது உலகம்-நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. |
117 பதிவிறக்கம் செய்யஉரை |
118. | சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால் கோடாமை-சான்றோர்க்கு அணி. |
118 பதிவிறக்கம் செய்யஉரை |
119. | சொற் கோட்டம் இல்லது, செப்பம்-ஒருதலையா உட் கோட்டம் இன்மை பெறின். |
119 பதிவிறக்கம் செய்யஉரை |
120. | வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப் பிறவும் தமபோல் செயின். |
120 பதிவிறக்கம் செய்யஉரை |