பிறன் இல் விழையாமை
 
141. பிறன் பொருளாள்-பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம், பொருள், கண்டார்கண் இல்.

141

பதிவிறக்கம் செய்ய
உரை
 
142. அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின், பேதையார் இல்.

142

பதிவிறக்கம் செய்ய
உரை
 
143. விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற-தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்.

143

பதிவிறக்கம் செய்ய
உரை
 
144. எனைத் துணையர் ஆயினும் என்னாம்-தினைத் துணையும்
தேரான், பிறன் இல் புகல?.

144

பதிவிறக்கம் செய்ய
உரை
 
145. 'எளிது' என இல் இறப்பான் எய்தும்-எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

145

பதிவிறக்கம் செய்ய
உரை
 
146. பகை, பாவம், அச்சம், பழி என நான்கும்
இகவா ஆம்-இல் இறப்பான்கண்.

146

பதிவிறக்கம் செய்ய
உரை
 
147. அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்.

147

பதிவிறக்கம் செய்ய
உரை
 
148. பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ?ஆன்ற ஒழுக்கு.

148

பதிவிறக்கம் செய்ய
உரை
 
149. 'நலக்கு உரியார் யார்?' எனின், நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதார்.

149

பதிவிறக்கம் செய்ய
உரை
 
150. அறன் வரையான், அல்ல செயினும், பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

150

பதிவிறக்கம் செய்ய
உரை