தொடக்கம் | ||
பொறை உடைமை
|
||
151. | அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. |
151 பதிவிறக்கம் செய்யஉரை |
152. | பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை மறத்தல் அதனினும் நன்று. |
152 பதிவிறக்கம் செய்யஉரை |
153. | இன்மையுள் இன்மை விருந்து ஒரால்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. |
153 பதிவிறக்கம் செய்யஉரை |
154. | நிறை உடைமை நீங்காமை வேண்டின், பொறை உடைமை போற்றி ஒழுகப்படும். |
154 பதிவிறக்கம் செய்யஉரை |
155. | ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர், பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. |
155 பதிவிறக்கம் செய்யஉரை |
156. | ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். |
156 பதிவிறக்கம் செய்யஉரை |
157. | திறன் அல்ல தன்-பிறர் செய்யினும், நோ நொந்து, அறன் அல்ல செய்யாமை நன்று. |
157 பதிவிறக்கம் செய்யஉரை |
158. | மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம் தகுதியான் வென்றுவிடல்!. |
158 பதிவிறக்கம் செய்யஉரை |
159. | துறந்தாரின் தூய்மை உடையர்-இறந்தார்வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர். |
159 பதிவிறக்கம் செய்யஉரை |
160. | உண்ணாது நோற்பார் பெரியர்-பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின். |
160 பதிவிறக்கம் செய்யஉரை |