அழுக்காறாமை
 
161. ஒழுக்கு ஆறாக் கொள்க-ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

161

பதிவிறக்கம் செய்ய
உரை
 
162. விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை-யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

162

பதிவிறக்கம் செய்ய
உரை
 
163. அறன், ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்.

163

பதிவிறக்கம் செய்ய
உரை
 
164. அழுக்காற்றின் அல்லவை செய்யார்-இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

164

பதிவிறக்கம் செய்ய
உரை
 
165. அழுக்காறு உடையார்க்கு அது சாலும்- ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.

165

பதிவிறக்கம் செய்ய
உரை
 
166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

166

பதிவிறக்கம் செய்ய
உரை
 
167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

167

பதிவிறக்கம் செய்ய
உரை
 
168. அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

168

பதிவிறக்கம் செய்ய
உரை
 
169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்
கேடும், நினைக்கப்படும்.

169

பதிவிறக்கம் செய்ய
உரை
 
170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

170

பதிவிறக்கம் செய்ய
உரை