தொடக்கம் | ||
புறம் கூறாமை
|
||
181. | அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன் புறம் கூறான் என்றல் இனிது. |
181 பதிவிறக்கம் செய்யஉரை |
182. | அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே- புறன் அழீஇப் பொய்த்து நகை. |
182 பதிவிறக்கம் செய்யஉரை |
183. | புறம் கூறி, பொய்த்து, உயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும். |
183 பதிவிறக்கம் செய்யஉரை |
184. | கண் நின்று, கண் அறச் சொல்லினும், சொல்லற்க- முன் இன்று பின் நோக்காச் சொல். |
184 பதிவிறக்கம் செய்யஉரை |
185. | அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் புன்மையால் காணப்படும். |
185 பதிவிறக்கம் செய்யஉரை |
186. | பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும். |
186 பதிவிறக்கம் செய்யஉரை |
187. | பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்-நகச் சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர். |
187 பதிவிறக்கம் செய்யஉரை |
188. | துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார், என்னைகொல், ஏதிலார்மாட்டு?. |
188 பதிவிறக்கம் செய்யஉரை |
189. | அறன் நோக்கி ஆற்றும் கொல் வையம்-புறன் நோக்கிப் புன் சொல் உரைப்பான் பொறை. |
189 பதிவிறக்கம் செய்யஉரை |
190. | ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின், தீது உண்டோ, மன்னும் உயிரக்கு?. |
190 பதிவிறக்கம் செய்யஉரை |