தொடக்கம் | ||
தீவினை அச்சம்
|
||
201. | தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்- தீவினை என்னும் செருக்கு. |
201 பதிவிறக்கம் செய்யஉரை |
202. | தீயவை தீய பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும். |
202 பதிவிறக்கம் செய்யஉரை |
203. | அறிவினுள் எல்லாம் தலை என்ப-தீய செறுவார்க்கும் செய்யா விடல். |
203 பதிவிறக்கம் செய்யஉரை |
204. | மறந்தும் பிறன் கேடு சூழற்க! சூழின், அறம் சூழும், சூழ்ந்தவன் கேடு. |
204 பதிவிறக்கம் செய்யஉரை |
205. | 'இலன்' என்று தீயவை செய்யற்க! செய்யின், இலன் ஆகும், மற்றும் பெயர்த்து. |
205 பதிவிறக்கம் செய்யஉரை |
206. | தீப் பால தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப் பால தன்னை அடல் வேண்டாதான்!. |
206 பதிவிறக்கம் செய்யஉரை |
207. | எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை வீயாது, பின் சென்று, அடும். |
207 பதிவிறக்கம் செய்யஉரை |
208. | தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று. |
208 பதிவிறக்கம் செய்யஉரை |
209. | தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும் துன்னற்க, தீவினைப் பால்!. |
209 பதிவிறக்கம் செய்யஉரை |
210. | அருங் கேடன் என்பது அறிக-மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்?. |
210 பதிவிறக்கம் செய்யஉரை |