தொடக்கம் | ||
ஒப்புரவு அறிதல்
|
||
211. | கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு என் ஆற்றும் கொல்லோ, உலகு?. |
211 பதிவிறக்கம் செய்யஉரை |
212. | தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற்பொருட்டு. |
212 பதிவிறக்கம் செய்யஉரை |
213. | புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல் அரிதே- ஒப்புரவின் நல்ல பிற. |
213 பதிவிறக்கம் செய்யஉரை |
214. | ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும். |
214 பதிவிறக்கம் செய்யஉரை |
215. | ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம் பேர் அறிவாளன் திரு. |
215 பதிவிறக்கம் செய்யஉரை |
216. | பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்-செல்வம் நயன் உடையான்கண் படின். |
216 பதிவிறக்கம் செய்யஉரை |
217. | மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால்-செல்வம் பெருந்தகையான்கண் படின். |
217 பதிவிறக்கம் செய்யஉரை |
218. | இடன் இல் பருவத்தும், ஒப்புரவிற்கு ஒல்கார்- கடன் அறி காட்சியவர். |
218 பதிவிறக்கம் செய்யஉரை |
219. | நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர செய்யாது அமைகலா ஆறு. |
219 பதிவிறக்கம் செய்யஉரை |
220. | 'ஒப்புரவினால் வரும், கேடு' எனின், அஃது ஒருவன் விற்றுக் கோள் தக்கது உடைத்து. |
220 பதிவிறக்கம் செய்யஉரை |