புகழ்
 
231. ஈதல்! இசைபட வாழ்தல்! அது அல்லது
ஊதியம் இல்லை, உயிர்க்கு.

231

பதிவிறக்கம் செய்ய
உரை
 
232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

232

பதிவிறக்கம் செய்ய
உரை
 
233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,
பொன்றாது நிற்பது ஒன்று இல்.

233

பதிவிறக்கம் செய்ய
உரை
 
234. நில வரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப்
போற்றாது, புத்தேள் உலகு.

234

பதிவிறக்கம் செய்ய
உரை
 
235. நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.

235

பதிவிறக்கம் செய்ய
உரை
 
236. தோன்றின், புகழொடு தோன்றுக! அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

236

பதிவிறக்கம் செய்ய
உரை
 
237. புகழ்பட வாழாதார் தம் நோவார், தம்மை
இகழ்வாரை நோவது எவன்?.

237

பதிவிறக்கம் செய்ய
உரை
 
238. 'வசை' என்ப, வையத்தார்க்கு எல்லாம்-’இசை’ என்னும்
எச்சம் பெறாஅவிடின்.

238

பதிவிறக்கம் செய்ய
உரை
 
239. வசை இலா வண் பயன் குன்றும்-இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.

239

பதிவிறக்கம் செய்ய
உரை
 
240. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர்.

240

பதிவிறக்கம் செய்ய
உரை