தொடக்கம் | ||
புகழ்
|
||
231. | ஈதல்! இசைபட வாழ்தல்! அது அல்லது ஊதியம் இல்லை, உயிர்க்கு. |
231 பதிவிறக்கம் செய்யஉரை |
232. | உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். |
232 பதிவிறக்கம் செய்யஉரை |
233. | ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல். |
233 பதிவிறக்கம் செய்யஉரை |
234. | நில வரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப் போற்றாது, புத்தேள் உலகு. |
234 பதிவிறக்கம் செய்யஉரை |
235. | நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது. |
235 பதிவிறக்கம் செய்யஉரை |
236. | தோன்றின், புகழொடு தோன்றுக! அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று. |
236 பதிவிறக்கம் செய்யஉரை |
237. | புகழ்பட வாழாதார் தம் நோவார், தம்மை இகழ்வாரை நோவது எவன்?. |
237 பதிவிறக்கம் செய்யஉரை |
238. | 'வசை' என்ப, வையத்தார்க்கு எல்லாம்-’இசை’ என்னும் எச்சம் பெறாஅவிடின். |
238 பதிவிறக்கம் செய்யஉரை |
239. | வசை இலா வண் பயன் குன்றும்-இசை இலா யாக்கை பொறுத்த நிலம். |
239 பதிவிறக்கம் செய்யஉரை |
240. | வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர். |
240 பதிவிறக்கம் செய்யஉரை |