தொடக்கம் | ||
புலால் மறுத்தல்
|
||
251. | தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?. |
251 பதிவிறக்கம் செய்யஉரை |
252. | பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருள் ஆட்சி ஆங்கு இல்லை, ஊன் தின்பவர்க்கு. |
252 பதிவிறக்கம் செய்யஉரை |
253. | படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம். |
253 பதிவிறக்கம் செய்யஉரை |
254. | 'அருள்', அல்லது, யாது?' எனின்,-கொல்லாமை, கோறல்: பொருள் அல்லது, அவ் ஊன் தினல். |
254 பதிவிறக்கம் செய்யஉரை |
255. | உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண, அண்ணாத்தல் செய்யாது, அளறு. |
255 பதிவிறக்கம் செய்யஉரை |
256. | தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும் விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல். |
256 பதிவிறக்கம் செய்யஉரை |
257. | உண்ணாமை வேண்டும், புலாஅல்-பிறிது ஒன்றன் புண்; அது உணர்வார்ப் பெறின். |
257 பதிவிறக்கம் செய்யஉரை |
258. | செயிரின் தலைப் பிரிந்த காட்சியார் உண்ணார், உயிரின் தலைப்பிரிந்த ஊன். |
258 பதிவிறக்கம் செய்யஉரை |
259. | அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று. |
259 பதிவிறக்கம் செய்யஉரை |
260. | கொல்லான், புலாலை மறுத்தானைக் கைகூப்பி, எல்லா உயிரும் தொழும். |
260 பதிவிறக்கம் செய்யஉரை |