தவம்
 
261. உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.

261

பதிவிறக்கம் செய்ய
உரை
 
262. தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம், அதனை
அஃது இலார் மேற்கொள்வது.

262

பதிவிறக்கம் செய்ய
உரை
 
263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார்கொல்-
மற்றையவர்கள், தவம்!.

263

பதிவிறக்கம் செய்ய
உரை
 
264. ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்,
எண்ணின், தவத்தான் வரும்.

264

பதிவிறக்கம் செய்ய
உரை
 
265. வேண்டிய வேண்டியாங்கு எய்தலான், செய் தவம்
ஈண்டு முயலப்படும்.

265

பதிவிறக்கம் செய்ய
உரை
 
266. தவம் செய்வார் தம் கருமம் செய்வார்; மற்று அல்லார்
அவம் செய்வார், ஆசையுள் பட்டு.

266

பதிவிறக்கம் செய்ய
உரை
 
267. சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும்-துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு.

267

பதிவிறக்கம் செய்ய
உரை
 
268. தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும்.

268

பதிவிறக்கம் செய்ய
உரை
 
269. கூற்றம் குதித்தலும் கைகூடும்-நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.

269

பதிவிறக்கம் செய்ய
உரை
 
270. இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார்
சிலர்; பலர் நோலாதவர்.

270

பதிவிறக்கம் செய்ய
உரை