சிற்றினம் சேராமை
 
451. சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்துவிடும்.

451

பதிவிறக்கம் செய்ய
உரை
 
452. நிலத்து இயல்பான் நீர் திரிந்து, அற்று ஆகும்;- மாந்தர்க்கு
‘இனத்து’ இயல்பது ஆகும், அறிவு.

452

பதிவிறக்கம் செய்ய
உரை
 
453. மனத்தான் ஆம், மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான் ஆம்,
‘இன்னான்’ எனப்படும் சொல்.

453

பதிவிறக்கம் செய்ய
உரை
 
454. மனத்து உளது போலக் காட்டி, ஒருவற்கு
இனத்து உளது ஆகும்-அறிவு.

454

பதிவிறக்கம் செய்ய
உரை
 
455. மனம் தூய்மை, செய்வினை தூய்மை, இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்.

455

பதிவிறக்கம் செய்ய
உரை
 
456. மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும்; இனம் தூயார்க்கு
இல்லை, நன்று ஆகா வினை.

456

பதிவிறக்கம் செய்ய
உரை
 
457. மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம்; இன நலம்
எல்லாப் புகழும் தரும்.

457

பதிவிறக்கம் செய்ய
உரை
 
458. மன நலம் நன்கு உடையர் ஆயினும், சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து.

458

பதிவிறக்கம் செய்ய
உரை
 
459. மன நலத்தின் ஆகும், மறுமை; மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.

459

பதிவிறக்கம் செய்ய
உரை
 
460. நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை; தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்.

460

பதிவிறக்கம் செய்ய
உரை