தொடக்கம் | ||
சிற்றினம் சேராமை
|
||
451. | சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும். |
451 பதிவிறக்கம் செய்யஉரை |
452. | நிலத்து இயல்பான் நீர் திரிந்து, அற்று ஆகும்;- மாந்தர்க்கு ‘இனத்து’ இயல்பது ஆகும், அறிவு. |
452 பதிவிறக்கம் செய்யஉரை |
453. | மனத்தான் ஆம், மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான் ஆம், ‘இன்னான்’ எனப்படும் சொல். |
453 பதிவிறக்கம் செய்யஉரை |
454. | மனத்து உளது போலக் காட்டி, ஒருவற்கு இனத்து உளது ஆகும்-அறிவு. |
454 பதிவிறக்கம் செய்யஉரை |
455. | மனம் தூய்மை, செய்வினை தூய்மை, இரண்டும் இனம் தூய்மை தூவா வரும். |
455 பதிவிறக்கம் செய்யஉரை |
456. | மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும்; இனம் தூயார்க்கு இல்லை, நன்று ஆகா வினை. |
456 பதிவிறக்கம் செய்யஉரை |
457. | மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம்; இன நலம் எல்லாப் புகழும் தரும். |
457 பதிவிறக்கம் செய்யஉரை |
458. | மன நலம் நன்கு உடையர் ஆயினும், சான்றோர்க்கு இன நலம் ஏமாப்பு உடைத்து. |
458 பதிவிறக்கம் செய்யஉரை |
459. | மன நலத்தின் ஆகும், மறுமை; மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து. |
459 பதிவிறக்கம் செய்யஉரை |
460. | நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை; தீ இனத்தின் அல்லற்படுப்பதூஉம் இல். |
460 பதிவிறக்கம் செய்யஉரை |