தொடக்கம் | ||
கூடா ஒழுக்கம்
|
||
271. | வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். |
271 பதிவிறக்கம் செய்யஉரை |
272. | வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-தன் நெஞ்சம் தான் அறி குற்றபடின்?. |
272 பதிவிறக்கம் செய்யஉரை |
273. | வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று. |
273 பதிவிறக்கம் செய்யஉரை |
274. | தவம் மறைந்து, அல்லவை செய்தல்-புதல்மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று. |
274 பதிவிறக்கம் செய்யஉரை |
275. | 'பற்று அற்றேம்' என்பார் படிற்று ஒழுக்கம். ‘எற்று! எற்று!' என்று ஏதம் பலவும் தரும். |
275 பதிவிறக்கம் செய்யஉரை |
276. | நெஞ்சின் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து, வாழ்வாரின் வன்கணார் இல். |
276 பதிவிறக்கம் செய்யஉரை |
277. | புறம் குன்றி கண்டனையரேனும், அகம் குன்றி மூக்கில் கரியார் உடைத்து. |
277 பதிவிறக்கம் செய்யஉரை |
278. | மனத்தது மாசு ஆக, மாண்டார் நீர் ஆடி, மறைந்து ஒழுகும் மாந்தர் பலர். |
278 பதிவிறக்கம் செய்யஉரை |
279. | கணை கொடிது; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல். |
279 பதிவிறக்கம் செய்யஉரை |
280. | மழித்தலும் நீட்டலும் வேண்டா- உலகம் பழித்தது ஒழித்துவிடின். |
280 பதிவிறக்கம் செய்யஉரை |