தொடக்கம் | ||
கள்ளாமை
|
||
281. | எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க, தன் நெஞ்சு!. |
281 பதிவிறக்கம் செய்யஉரை |
282. | உள்ளத்தால் உள்ளலும் தீதே; ‘பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம்’ எனல்!. |
282 பதிவிறக்கம் செய்யஉரை |
283. | களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து, ஆவது போல, கெடும். |
283 பதிவிறக்கம் செய்யஉரை |
284. | களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். |
284 பதிவிறக்கம் செய்யஉரை |
285. | அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். |
285 பதிவிறக்கம் செய்யஉரை |
286. | அளவின்கண் நின்று ஒழுகலாற்றார்-களவின்கண் கன்றிய காதலவர். |
286 பதிவிறக்கம் செய்யஉரை |
287. | களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். |
287 பதிவிறக்கம் செய்யஉரை |
288. | அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல, நிற்கும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு. |
288 பதிவிறக்கம் செய்யஉரை |
289. | அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர்-களவு அல்ல மற்றைய தேற்றாதவர். |
289 பதிவிறக்கம் செய்யஉரை |
290. | கள்வார்க்குத் தள்ளும், உயிர்நிலை; கள்ளார்க்குத் தள்ளாது, புத்தேள் உலகு. |
290 பதிவிறக்கம் செய்யஉரை |