தொடக்கம் | ||
வாய்மை
|
||
291. | 'வாய்மை எனப்படுவது யாது?' எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல். |
291 பதிவிறக்கம் செய்யஉரை |
292. | பொய்ம்மையும் வாய்மை இடத்த-புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின். |
292 பதிவிறக்கம் செய்யஉரை |
293. | தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின், தன் நெஞ்சே தன்னைச் சுடும். |
293 பதிவிறக்கம் செய்யஉரை |
294. | உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். |
294 பதிவிறக்கம் செய்யஉரை |
295. | மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை. |
295 பதிவிறக்கம் செய்யஉரை |
296. | பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை, எல்லா அறமும் தரும். |
296 பதிவிறக்கம் செய்யஉரை |
297. | பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று. |
297 பதிவிறக்கம் செய்யஉரை |
298. | புறம் தூய்மை நீரால் அமையும்;- அகம் தூய்மை வாய்மையால் காணப்படும். |
298 பதிவிறக்கம் செய்யஉரை |
299. | எல்லா விளக்கும் விளக்கு அல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. |
299 பதிவிறக்கம் செய்யஉரை |
300. | யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை-எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற. |
300 பதிவிறக்கம் செய்யஉரை |