தொடக்கம் | ||
வெகுளாமை
|
||
301. | செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல் இடத்து, காக்கின் என்? காவாக்கால் என்?. |
301 பதிவிறக்கம் செய்யஉரை |
302. | செல்லா இடத்துச் சினம் தீது; செல் இடத்தும், இல், அதனின் தீய பிற. |
302 பதிவிறக்கம் செய்யஉரை |
303. | மறத்தல், வெகுளியை யார்மாட்டும்-தீய பிறத்தல் அதனான் வரும். |
303 பதிவிறக்கம் செய்யஉரை |
304. | நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ, பிற?. |
304 பதிவிறக்கம் செய்யஉரை |
305. | தன்னைத் தான் காக்கின், சினம் காக்க! காவாக்கால், தன்னையே கொல்லும், சினம். |
305 பதிவிறக்கம் செய்யஉரை |
306. | சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும். |
306 பதிவிறக்கம் செய்யஉரை |
307. | சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று. |
307 பதிவிறக்கம் செய்யஉரை |
308. | இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று. |
308 பதிவிறக்கம் செய்யஉரை |
309. | உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். |
309 பதிவிறக்கம் செய்யஉரை |
310. | இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. |
310 பதிவிறக்கம் செய்யஉரை |