| தொடக்கம் | ||
| இன்னா செய்யாமை
|
||
| 311. | சிறப்பு ஈனும் செல்வம் பெறினும், பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள். |
311 பதிவிறக்கம் செய்யஉரை |
| 312. | கறுத்து இன்னா செய்த அக்கண்ணும், மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள். |
312 பதிவிறக்கம் செய்யஉரை |
| 313. | செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின், உய்யா விழுமம் தரும். |
313 பதிவிறக்கம் செய்யஉரை |
| 314. | இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நல் நயம் செய்து, விடல். |
314 பதிவிறக்கம் செய்யஉரை |
| 315. | அறிவினான் ஆகுவது உண்டோ-பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை?. |
315 பதிவிறக்கம் செய்யஉரை |
| 316. | இன்னா எனத் தான் உணர்ந்தவை, துன்னாமை வேண்டும், பிறன்கண் செயல். |
316 பதிவிறக்கம் செய்யஉரை |
| 317. | எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான் ஆம் மாணா செய்யாமை தலை. |
317 பதிவிறக்கம் செய்யஉரை |
| 318. | தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ, மன் உயிர்க்கு இன்னா செயல்?. |
318 பதிவிறக்கம் செய்யஉரை |
| 319. | பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும். |
319 பதிவிறக்கம் செய்யஉரை |
| 320. | நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்; நோய் செய்யார், நோய் இன்மை வேண்டுபவர். |
320 பதிவிறக்கம் செய்யஉரை |