தொடக்கம் | ||
கொல்லாமை
|
||
321. | 'அறவினை யாது?' எனின், கொல்லாமை; கோறல் பிற வினை எல்லாம் தரும். |
321 பதிவிறக்கம் செய்யஉரை |
322. | பகுத்து உண்டு, பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. |
322 பதிவிறக்கம் செய்யஉரை |
323. | ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று. |
323 பதிவிறக்கம் செய்யஉரை |
324. | 'நல்லாறு எனப்படுவது யாது?' எனின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி. |
324 பதிவிறக்கம் செய்யஉரை |
325. | நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான், தலை. |
325 பதிவிறக்கம் செய்யஉரை |
326. | கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது, உயிர் உண்ணும் கூற்று. |
326 பதிவிறக்கம் செய்யஉரை |
327. | தன் உயிர் நீப்பினும் செய்யற்க-தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை. |
327 பதிவிறக்கம் செய்யஉரை |
328. | நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும், சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை. |
328 பதிவிறக்கம் செய்யஉரை |
329. | கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர், புன்மை தெரிவார் அகத்து. |
329 பதிவிறக்கம் செய்யஉரை |
330. | 'உயிர் உடம்பின் நீக்கியார்' என்ப-'செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர்'. |
330 பதிவிறக்கம் செய்யஉரை |