தொடக்கம் | ||
நிலையாமை
|
||
331. | நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை கடை. |
331 பதிவிறக்கம் செய்யஉரை |
332. | கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே, பெருஞ் செல்வம்; போக்கும், அது விளிந்தற்று. |
332 பதிவிறக்கம் செய்யஉரை |
333. | அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்றால், அற்குப ஆங்கே செயல். |
333 பதிவிறக்கம் செய்யஉரை |
334. | நாள் என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும் வாளது-உணர்வார்ப் பெறின். |
334 பதிவிறக்கம் செய்யஉரை |
335. | நாச் செற்று, விக்குள் மேல்வாராமுன், நல் வினை மேற்சென்று செய்யப்படும். |
335 பதிவிறக்கம் செய்யஉரை |
336. | 'நெருநல் உளன், ஒருவன்; இன்று இல்லை!' என்னும் பெருமை உடைத்து, இவ் உலகு. |
336 பதிவிறக்கம் செய்யஉரை |
337. | ஒரு பொழுதும் வாழ்வது அறியார், கருதுப- கோடியும் அல்ல, பல. |
337 பதிவிறக்கம் செய்யஉரை |
338. | குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே- உடம்பொடு உயிரிடை நட்பு. |
338 பதிவிறக்கம் செய்யஉரை |
339. | உறங்குவது போலும், சாக்காடு; உறங்கி விழிப்பது போலும், பிறப்பு. |
339 பதிவிறக்கம் செய்யஉரை |
340. | புக்கில் அமைந்தின்றுகொல்லோ-உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு!. |
340 பதிவிறக்கம் செய்யஉரை |