நிலையாமை
 
331. நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை.

331

பதிவிறக்கம் செய்ய
உரை
 
332. கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே, பெருஞ் செல்வம்;
போக்கும், அது விளிந்தற்று.

332

பதிவிறக்கம் செய்ய
உரை
 
333. அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்றால்,
அற்குப ஆங்கே செயல்.

333

பதிவிறக்கம் செய்ய
உரை
 
334. நாள் என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும்
வாளது-உணர்வார்ப் பெறின்.

334

பதிவிறக்கம் செய்ய
உரை
 
335. நாச் செற்று, விக்குள் மேல்வாராமுன், நல் வினை
மேற்சென்று செய்யப்படும்.

335

பதிவிறக்கம் செய்ய
உரை
 
336. 'நெருநல் உளன், ஒருவன்; இன்று இல்லை!' என்னும்
பெருமை உடைத்து, இவ் உலகு.

336

பதிவிறக்கம் செய்ய
உரை
 
337. ஒரு பொழுதும் வாழ்வது அறியார், கருதுப-
கோடியும் அல்ல, பல.

337

பதிவிறக்கம் செய்ய
உரை
 
338. குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே-
உடம்பொடு உயிரிடை நட்பு.

338

பதிவிறக்கம் செய்ய
உரை
 
339. உறங்குவது போலும், சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும், பிறப்பு.

339

பதிவிறக்கம் செய்ய
உரை
 
340. புக்கில் அமைந்தின்றுகொல்லோ-உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு!.

340

பதிவிறக்கம் செய்ய
உரை